20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கொலம்பியாவில் நடைபெற்று வருகிறது. மும்முறை தாண்டுதல் தடகளப் போட்டில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு வீரர் செல்வ பிரபு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் வாழ்த்து
இருபது வயதிற்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபு அவர்களை பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில வாழ்த்து தெரிவித்துள்ளார்.
" #U20 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைச் சாதித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபு அவர்களுக்கு எனது பாராட்டுகள். வருங்காலத்தில் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் அடையாளமாக நீங்கள் மின்ன வாழ்த்துகிறேன். " என்று தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் வாழ்த்து
இருபது வயதிற்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபு அவர்களை பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில வாழ்த்து தெரிவித்துள்ளார்.
" #U20 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைச் சாதித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபு அவர்களுக்கு எனது பாராட்டுகள். வருங்காலத்தில் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் அடையாளமாக நீங்கள் மின்ன வாழ்த்துகிறேன். " என்று தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.