ஆப்நகரம்

பாலியல் புகாரில் சிக்கிய கபடி பயிற்சியாளர் தற்கொலை!

பெங்களூரு: கபடி பயிற்சியாளர் ருத்ரப்பா ஹோசாமனி பெங்களூர் ஹோட்டலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Samayam Tamil 16 Oct 2018, 7:45 pm
பெங்களுரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருப்பவர் ருத்ரப்பா ஹோசாமனி (59 வயது). இவர் உடைமாற்றும் அறைக்குள் வந்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
Samayam Tamil 4


இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் வந்து ருத்ரப்பாவை தாக்கினர். தவிர, சிறுமி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், ருத்ரப்பா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த ரூமில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

அதில், “தற்கொலை செய்வதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் உதவியில்லாமல் உள்ளேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. தனது மனைவியை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் மகனிடம் கேட்டுக்கொள்கிறேன். என் உடலை தானம் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன். என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அழுகிய நிலையில் ருத்ரப்பா உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனால் தானம் செய்வது கடினம் என போலீசார் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்