ஆப்நகரம்

Manish Kaushik : உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஃபைனலில் அமித் பன்ஹால்!

புதுடெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அமித் பன்ஹால் ஃபைனலுக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் இத்தொடரின் ஃபைனல் வரை முன்னேறிய முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார்.

Samayam Tamil 20 Sep 2019, 4:51 pm
ரஷ்யாவில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் 52 கிலோ சாம்பியன்ஷிப் அரையிறுதியில் இந்தியாவின் அமித் பன்ஹால், கஜகஸ்தானின் சாகன் பிபோசினோவை எதிர்கொண்டார்.
Samayam Tamil Amit Panghal


அமித் ஆதிக்கம்....
இதில் துவக்கம் முதல் அமித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். துவக்கம் முதல் இருவரும் புள்ளிகள் பெற ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். ஆனால் அமித்தின் கை கொஞ்சம் ஓங்கியிருந்தது.


பின் பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில் இருவரும் துவக்கத்தில் சிறப்பாக தடுத்து ஆடினர். ஆனாப் போக போக அமித் ஆக்ரோஷமாக அடிக்க துவங்க, சாகனால் மீண்டும் எழுச்சி பெற முடியவில்லை.

புதுவரலாறு...
இதையடுத்து அமித் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தானின் சகானை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஃபைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார் அமித்.


மணீஷ் கவுசிக் வெண்கலம்....
இதே போல 63 கிலோ பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் மணீஷ் கவுசிக், க்யூபாவின் ஆண்டி கோமஸ் க்ரூஸ் இடம் 0-5 என அரையிறுதியில் தோல்வியடைந்து, வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்