ஆப்நகரம்

Javelin Throw: தேசிய சாதனயை உடைத்த அனு ராணி: ஃபைனலுக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தார்!

தோஹா: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஈட்டி எறிதலில் ஃபைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் அனு ராணி.

Authored byவிஸ்வநாதன் எஸ் | Samayam Tamil 30 Sep 2019, 9:28 pm
கத்தாரின் தோஹாவில் உலக தடகள் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் அனு ராணி பங்கேற்றார்.
Samayam Tamil Annu Rani


அசத்தல் ராணி..
இதன் ‘குரூப் - ஏ’ தகுதிச்சுற்றின் முதல் சுற்றில் ராணி, 57.05 மீ., தூரம் வீசினார். தொடர்ந்து இரண்டாவது வாய்ப்பில் ராணி 62.43 மீ., தூரம் வீசினார். இதன் மூலம் தனது தேசிய சாதனையை (62.34 மீ.,) தகர்த்தார்.

ஃபைனலுக்கு தகுதி
மூன்றாவது வாய்ப்பில், ராணி 60.50 மீ., தூரம் வீசினார். இந்நிலையில் ஃபைனலுக்கு ராணி முன்னேறினார்.
இதன் மூலம் ஈட்டி எறிதலின் ஃபைனலுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார்.

இந்நிலையில் இப்போட்டியின் குரூப் - ஏ, பி, பிரிவுகளில் 63.50 மீ., தூரத்துக்கு மேல், வீசும் வீரர்கள் நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெறுவார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்