அன்டால்யா: கஜகஸ்தானில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அடுத்தடுத்து வெண்கலப் பதக்கங்களைக் கோட்டை விட்டது.
கஜகஸ்தான் நாட்டின் அன்டால்யா நகரில் நடக்கும் உலகக் கோப்பை வில்வித்தைத் தொடரின் ஸ்டேஜ் 2 வெண்கலப் பதக்கப் போட்டி இன்று நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, சின்னா ராஜூ-ஸ்ரீதர் மற்றும் குர்விந்தர் சிங் ஆகியோர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பைரே-ஜூலியன் டெலோசே, டொமினிக் ஜெனெட், ஃபாபியன் டெலொபெல்லே ஆகியோரை எதிர்கொண்டனர்.
இதில் இந்திய அணி 222-227 என்ற புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை கோட்டைவிட்டது. இரண்டாவது சுற்றின் முடிவில் 114-114 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. ஆனால், மூன்றாவது சுற்றில் கோட்டை விட்டதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பறிபோனது.
பின்னர் நடந்த மகளிர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் திவ்யா தஹால், ஜோதி சுரேகா, ஸ்நேஹால் மந்த்ரே ஆகியோர் ஆகியோர் முதல் இரு சுற்றுகளின் முடிவில் 112-110 என்ற புள்ளிகளுடன் முன்னிலை பெற்ற போதும், முடிவில் 227-228 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை இத்தாலி அணிக்கு விட்டுக்கொடுத்தது.
கஜகஸ்தான் நாட்டின் அன்டால்யா நகரில் நடக்கும் உலகக் கோப்பை வில்வித்தைத் தொடரின் ஸ்டேஜ் 2 வெண்கலப் பதக்கப் போட்டி இன்று நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, சின்னா ராஜூ-ஸ்ரீதர் மற்றும் குர்விந்தர் சிங் ஆகியோர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பைரே-ஜூலியன் டெலோசே, டொமினிக் ஜெனெட், ஃபாபியன் டெலொபெல்லே ஆகியோரை எதிர்கொண்டனர்.
இதில் இந்திய அணி 222-227 என்ற புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை கோட்டைவிட்டது. இரண்டாவது சுற்றின் முடிவில் 114-114 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. ஆனால், மூன்றாவது சுற்றில் கோட்டை விட்டதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பறிபோனது.
பின்னர் நடந்த மகளிர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் திவ்யா தஹால், ஜோதி சுரேகா, ஸ்நேஹால் மந்த்ரே ஆகியோர் ஆகியோர் முதல் இரு சுற்றுகளின் முடிவில் 112-110 என்ற புள்ளிகளுடன் முன்னிலை பெற்ற போதும், முடிவில் 227-228 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை இத்தாலி அணிக்கு விட்டுக்கொடுத்தது.