ஆப்நகரம்

4 மனைவிகள்,5 குழந்தைகள்... மாரடோனா மரணத்தால் கலங்கும் குடும்பம்

பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாகக் காலமானார்.

Samayam Tamil 26 Nov 2020, 8:56 am
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா (60) காலமானார். உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர் என கொண்டாடப்பட்ட இவர், மொத்தம் 4 உலகக் கோப்பைகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். 1986ஆம் ஆண்டில் அர்ஜன்டினா அணிக்குத் தலைமை ஏற்று உலகக் கோப்பை பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில், அவரின் மரணம் தற்போது அர்ஜண்டினாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil diego-maradona-argentina


மாரடோனாவுக்கு மூளையில் இரத்த உறைவு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரத்தில் இதற்காக அறுவைச் சிகிச்சை நடந்த நிலையில் தற்போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்த மாரடோனா 1997ஆம் ஆண்டு ஓய்வுபெற்று, 2008-2010ஆம் ஆண்டில் அர்ஜண்டினா அணிக்குப் பயிற்சியாளராகச் செயல்பட்டார். இவருக்கு மொத்தம் நான்கு மனைவிகள், 5 குழந்தைகள் உள்ளனர். 20 வயதில் ஒரு மனைவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்