ஆப்நகரம்

எங்கு வேண்டுமானாலும் விளையாட வீரர்களுக்கு உரிமை இருக்கு !

விளையாட்டு வீரர்களுக்கு இந்த உலகத்தில் எங்கு வேண்டுமாலும் விளையாட உரிமை உள்ளது என ஒலிம்பிக் நாயகி ஷாக்சி மாலிக் தெரிவித்துள்ளார்.

TOI Sports 7 Oct 2016, 9:35 pm
பெங்களூரு: விளையாட்டு வீரர்களுக்கு இந்த உலகத்தில் எங்கு வேண்டுமாலும் விளையாட உரிமை உள்ளது என ஒலிம்பிக் நாயகி ஷாக்சி மாலிக் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil athletes have right to play anywhere sakshi malik
எங்கு வேண்டுமானாலும் விளையாட வீரர்களுக்கு உரிமை இருக்கு !


இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து இந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கபடிப்போட்டியில் பங்கேற்பது சரியாக இருக்காது என பாகிஸ்தான் அணி இத்தொடரில் இருந்து விலகியது.

இது சரியானது அல்ல என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக் விளையாட்டு வீரர்களுக்கு எங்கு வேண்டுமானாலும் விளையாட உரிமை உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷாக்சி கூறியது:
இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பல நாட்டு வீரர்களை எதிர்த்து நாம் பங்கேற்கிறோமோ. அதேபோல, பாகிஸ்தான் வீரர்களும் எங்கு வேண்டுமாலும் போட்டியில் பங்கேற்க உரிமை உள்ளது. அதற்காக நான் அவர்களை இந்தியாவில் விளையாட் அழைக்கிறேன் என அர்த்தமில்லை.
இவ்வாறு ஷாக்சி கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்