டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்று அசத்திய இந்தியா வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்க்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றிபெற்று பட்டத்தைக் கைப்பற்றினார்.
இப்போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த் 21-10,21-5 என நேர் செட்களில் லீ ஹெய்ன் இல்ஐ வென்று சாதனைப் படைத்தார். குறிப்பாக, வெறும் 25 நிமிடங்களில் போட்டியை முடித்து மிரட்டினார்.
இதன் மூலம் 2017ஆம் ஆண்டில் தனது மூன்றாவது பட்டத்தைப் வசமாக்கினார். முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியாவில் நடைபெற்ற சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்றிருந்தார். சிங்கப்பூர் ஓபனிலும் இறுதி வரை முன்னேறி இரண்டாவது இடம் பெற்றார்.
தொடர்ந்து அசத்தி வரும் அவருக்கு, டென்மார்க் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்றதைப் பாராட்டும் விதமாக ரூ.5 லட்சம் பரிசளிப்பதாக இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
டென்மார்க் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றிபெற்று பட்டத்தைக் கைப்பற்றினார்.
இப்போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த் 21-10,21-5 என நேர் செட்களில் லீ ஹெய்ன் இல்ஐ வென்று சாதனைப் படைத்தார். குறிப்பாக, வெறும் 25 நிமிடங்களில் போட்டியை முடித்து மிரட்டினார்.
இதன் மூலம் 2017ஆம் ஆண்டில் தனது மூன்றாவது பட்டத்தைப் வசமாக்கினார். முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியாவில் நடைபெற்ற சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்றிருந்தார். சிங்கப்பூர் ஓபனிலும் இறுதி வரை முன்னேறி இரண்டாவது இடம் பெற்றார்.
தொடர்ந்து அசத்தி வரும் அவருக்கு, டென்மார்க் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்றதைப் பாராட்டும் விதமாக ரூ.5 லட்சம் பரிசளிப்பதாக இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.