ஆப்நகரம்

என்னாடா... பித்தலாட்டம் இது... பாயிண்ட் ஒன்னு தான்... ஆனா அவர் தான் ஜெயிச்சாரு...!

நுர் சுல்தான்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா அடைந்த தோல்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Sep 2019, 3:55 pm
கஜகஸ்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா பங்கேற்றார். முதல் சுற்றில் பூனியா, போலாந்தின் பியின்கோவிஸ்கீயை 9-2 என விழ்த்தினார்.
Samayam Tamil Bajrang Punia


இரண்டாவது சுற்றில் சுலோவேனியாவின் டேவிட் ஹபாத்தை 3-0 என வென்றார்.
தொடர்ந்து நடந்த காலிறுதியில் வட கொரியாவின் ஜாங் சால் சனை, இந்தியாவின் பஜ்ரங் பூனியா 8-1 என வீழ்த்தினார்.


சர்ச்சை ...
அடுத்து நடந்த அரையிறுதியில் கஜகஸ்தானின் தவத்தை எதிர்கொண்ட, பஜ்ரங் பூனியா, 9-9 என போட்டியை ‘டை’ செய்தார். ஆனால் புள்ளிகள் அடிப்படையில் கஜகஸ்தான் வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


மூன்று விதிகள்....
போட்டி ஒருவேளை ‘டை’ ஆகும் பட்சத்தில் அம்பயர்கள் மூன்று முக்கியமான விதிகளை பின்பற்ற வேண்டும். அதன்படி ஒரே அசைவில் அதிகபுள்ளிகள் பெற்றவர், கடைசியாக புள்ளிகள் பெற்ற வீரர் உள்ளிட்டவை அடங்கும். ஆனால் இது போன்ற விதிகளை பின்பற்றாமல், உள்ளூர் வீரருக்கு சாதகமாக அம்பயர்கள் முடிவை அறிவித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்