ஆப்நகரம்

தேசிய விளையாட்டு கண்காணிப்பாளர் பதவியிலிருந்து மேரி கோம், சுஷில் குமார் விலகல்!

இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மேரி கோம் மற்றும் சுஷில் குமார் ஆகியோர், தங்கள் தேசிய விளையாட்டு கண்காணிப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

TNN 6 Dec 2017, 11:41 pm
இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மேரி கோம் மற்றும் சுஷில் குமார் ஆகியோர், தங்கள் தேசிய விளையாட்டு கண்காணிப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
Samayam Tamil boxer mary kom and wrestler sushil kumar resigned from national sports observers
தேசிய விளையாட்டு கண்காணிப்பாளர் பதவியிலிருந்து மேரி கோம், சுஷில் குமார் விலகல்!


முன்னாள் விளையாட்டு அமைச்சர் விஜய் கோயல் கடந்த மார்ச் மாதம் மேரி கோம், சுஷில் குமார் உள்ளிட்ட 12 பேரை தேசிய விளையாட்டு கண்காணிப்பாளராக நியமித்தார்.

அதன்படி, மேரி கோம் குத்துச் சண்டை விளையாட்டிற்கும், சுஷில் குமார் மல்யுத்த விளையாட்டிற்கும் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டனர்.

ஆனால், அவர்கள் இருவரும் தற்போதும் அவர்களின் விளையாட்டுத் துறையில் செயல்பட்டு வருவதால், பல கருத்து முரண்பாடுகள் நிகழ வாய்ப்புள்ளதால், விளையாட்டுத் துறையின் நலனைக் கருதி அவர்கள் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட, விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தூர் அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்