ஆப்நகரம்

துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றார் இந்தியாவின் அமன்பிரீத் சிங்!

டெல்லியில் நடக்கும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், 50 மீட்டர் பிரிவில் இந்திய வீரர் அமன்பிரீத் சிங் வெண்கலம் வென்றார்.

TOI Sports 27 Oct 2017, 3:37 pm
புதுடெல்லி: டெல்லியில் நடக்கும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், 50 மீட்டர் பிரிவில் இந்திய வீரர் அமன்பிரீத் சிங் வெண்கலம் வென்றார்.
Samayam Tamil breaking indias amanpreet singh wins bronze medal in 50m air pistol event at issf world cup
துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றார் இந்தியாவின் அமன்பிரீத் சிங்!


சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட் பெடரேசன் (ஐ.எஸ்.எஸ்.எப்.,) சார்பில் டெல்லியில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது.

இதில் 50 மீட்டர் ஆண்கள் பிரிவு இறுதி சுற்று நடந்தது. இதில் இந்தியாவின் அமன்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்த துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்தது.

இப்போடியில் செர்பியாவின் மிகெக் தங்கப்பதக்கமும், உக்ரைனின் ஒலே உமுல்சுக் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் அணிகள் பிரிவில் ஏற்கனவே, இந்தியாவின் ஹீனா சித்து - ஜித்து ராய் ஜோடி தங்கம் வென்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்