டென்னிஸ் அம்பயரின் முகத்தை பஞ்சர் செய்த கனடா நாட்டை சேர்ந்த டெனிஸ் சபொவலோ போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே 2017ம் ஆண்டுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்து வருகின்றது.
இந்த போட்டியில் கனடாவின் டெனிஸ் சபொவலோ மற்றும் இங்கிலாந்தின் கெய்ல் எட்மண்ட் ஆகியோர் மோதினர். இந்த போட்டியின் போது இங்கிலாந்து வீரர் முதல் செட்டை கைப்பற்றி இருந்த நிலையில், அடுத்த செட்டின் அட்வான்ஸ் பாய்ண்டை பெற்றிருந்தார்.
இந்நிலையில் கனடா வீரர் டெனிஸ் தன் தவறான சர்வ் மூலம் புள்ளியை இழக்க இங்கிலாந்து வீரர் இரண்டாவது செட்டை வென்றார்.
இதனால் கடுப்பான டெனிஸ் சபொவலோ தன்னிடம் இருந்த மற்றொரு பந்தை பார்வையாளர்களை நோக்கி ஓங்கி அடித்தார். அது எதிர்பாராத விதமாக மைதானத்தில் இருந்த அம்பயர் அர்னாட் கபாஸின் கண்ணை பதம் பார்த்தது.
இதையடுத்து போட்டி விதிகளை மீறியதாக கூறி போட்டியிலிருந்து டெனிஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே 2017ம் ஆண்டுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்து வருகின்றது.
இந்த போட்டியில் கனடாவின் டெனிஸ் சபொவலோ மற்றும் இங்கிலாந்தின் கெய்ல் எட்மண்ட் ஆகியோர் மோதினர். இந்த போட்டியின் போது இங்கிலாந்து வீரர் முதல் செட்டை கைப்பற்றி இருந்த நிலையில், அடுத்த செட்டின் அட்வான்ஸ் பாய்ண்டை பெற்றிருந்தார்.
இந்நிலையில் கனடா வீரர் டெனிஸ் தன் தவறான சர்வ் மூலம் புள்ளியை இழக்க இங்கிலாந்து வீரர் இரண்டாவது செட்டை வென்றார்.
இதனால் கடுப்பான டெனிஸ் சபொவலோ தன்னிடம் இருந்த மற்றொரு பந்தை பார்வையாளர்களை நோக்கி ஓங்கி அடித்தார். அது எதிர்பாராத விதமாக மைதானத்தில் இருந்த அம்பயர் அர்னாட் கபாஸின் கண்ணை பதம் பார்த்தது.
இதையடுத்து போட்டி விதிகளை மீறியதாக கூறி போட்டியிலிருந்து டெனிஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.