ஆப்நகரம்

நரசிங் யாதவ் ஊக்கமருந்து சர்ச்சை : சி.பி.ஐ., வழக்குபதிவு!

மல்யுத்த வீரர் நரசிங் யாதவின் சர்ச்சை தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

TOI Sports 18 Oct 2016, 6:51 pm
புதுடில்லி: மல்யுத்த வீரர் நரசிங் யாதவின் சர்ச்சை தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.
Samayam Tamil cbi registers case in narsingh yadav doping scandal
நரசிங் யாதவ் ஊக்கமருந்து சர்ச்சை : சி.பி.ஐ., வழக்குபதிவு!


இந்திய மல்யுத்தவீரர் நரசிங் யாதவிற்கு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்ததால் அவரின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது. ஆனால் இவரது உணவில் யாரோ ஒருவர் அவருக்கு தெரியாமல் தடைசெய்யப்பட்ட பொருளை கலந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இதை நிரூபிக்க அவரிடம் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் இவ்வழக்கு இழுத்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் இவ்வழக்கை சி.பி.ஐ.,விசாரிக்க இந்திய பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்தது.

இந்நிலையில் உள்ளூர் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரித்து வந்த போதும் இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ., பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. இதன்படி இந்த வழக்கு 120-பி (கிரிமினல் குற்றம் மற்றும் 328 விஷம் கலப்பது) மற்றும் ஐ.பி.சி., 506 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்படவுள்ளதாக சி.பி.ஐ.., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்