ஆப்நகரம்

ஜூனியர் துப்பாக்கிச் சுடும் உலகக்கோப்பையில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு!

சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களைத் தனித்தனியே குறிப்பிட்டு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Apr 2018, 8:25 pm
சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களைத் தனித்தனியே குறிப்பிட்டு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகள்
ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகள்


இந்தியாவில் கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டில் மட்டும் அனைவரது கவனமும் செலுத்தப்படுவதால், மற்ற விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த பாராட்டும் மதிப்பும் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுவாகவே நிலவி வருகிறது. எனவே, விளையாட்டுத் துறையில் இந்தியா சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே குறிப்பிட்டு, பாராட்டி ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அதில், அந்தப் போட்டியில் பங்கேற்ற பதக்கம் வென்ற அர்ஜுன் பாபுதா, தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான், விவான் கபூர், மனு பாகர், கெளரவ் ரானா, அன்மோல் ஜெயின், அனீஸ், முஸ்கன், கனிமத் சீகன் ஆகியோரை, தனித்தனியே எந்தப் பிரிவில் எந்தப் பதக்கம் வென்றனர் என்பதைக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

இதேபோல், பெண்கள் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி கிரிக்கெட் வீராங்கனைகள், சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், பி.வி.சிந்து, சானியா மிர்ஸா என பலதரப்பட்ட விளையாட்டு வீரர்களையும் பாராட்டி அவர் அவ்வப்போது ட்விட் செய்து வருகிறார்.

நாட்டின் பிரதமர் மற்ற விளையாட்டு வீரர்களையும் அடையாளம் கண்டு,எ அவர்களைப் பாராட்டுவது, வீரர்களையும் அந்த விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாக அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்