ஆப்நகரம்

சபாஷ் சானியா! கர்ப்பகால யோகா செய்ததால் மகிழ்கிறேன்: மத்திய அமைச்சர் மேனகா காந்தி!

சானியா மிர்சா செய்த கர்ப்பகால யோகாவால் மகிழ்ச்சி அடைவதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Jun 2018, 12:12 pm
டெல்லி: சானியா மிர்சா செய்த கர்ப்பகால யோகாவால் மகிழ்ச்சி அடைவதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Sania Mirza


சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.

இந்நிலையில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கர்ப்பகால யோகாசனம் செய்யும் புகைப்படத்தை, தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், சர்வதேச யோகா தினமாக இருக்கலாம். இல்லையெனில் வேறு எந்த நாளாகவும் இருக்கலாம்.

நான் செய்யும் இந்த யோகாசனம் தான் கர்ப்ப காலத்தில் என்னை உடல் தகுதியுடன் வைத்திருக்கிறது. நீங்கள் எப்படி? என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் ஆதரவு பதிவுகள் இட்டிருந்தனர்.

இந்த பதிவை பார்த்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, சபாஷ் சானியா. உடலை தகுதியாக வைத்துக் கொள்ள கர்ப்ப கால யோகாசனம் செய்யும் உங்களது செயல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பதில் டுவிட் செய்துள்ளார்.

Central Minister Maneka Gandhi lauds Sania Mirza for practising prenatal.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்