ஆப்நகரம்

3 தங்கப் பதக்கங்கள் வென்ற சென்னை வீராங்கனை

எகிப்தில் நடைபெறும் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த செலினா செல்வகுமார் 3 தங்கப் பதக்கங்கள் வென்றார்.

TNN 17 Oct 2017, 5:29 pm
எகிப்தில் நடைபெறும் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த செலினா செல்வகுமார் 3 தங்கப் பதக்கங்கள் வென்றார்.
Samayam Tamil chennai girl wins three gold medals in egypt table tennis tournament
3 தங்கப் பதக்கங்கள் வென்ற சென்னை வீராங்கனை


எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெறும் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 17 வயதான சென்னையைச் சேர்ந்த வீராங்கனையான செலினா செல்வகுமார் பங்கேற்றார். ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 8ஆம் நிலை வீராங்கனையான எகிப்தின் மரியம் அலோட்பையை எதிர்த்து விளையாடினார். இதில் செலினா 11-5, 12-10, 8-11, 6-11, 11-3, 6-11, 11-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் நைஜீரியாவின் ஒரிபமைஸூடன் இணைந்து எகிப்தின் பரிதா பதாவி, கீரிஸ் நாட்டின் மலமாத்தேனியா ஜோடியை எதிர்த்து விளையாடிய செலினா 11-8, 12-10, 9-11, 8-11, 11-9 என்ற செட் கணக்கில் வென்றார்.

கலப்பு அணிகள் பிரிவிலும் ஏற்கெனவே தங்கப் பதக்கம் வென்றுள்ள செலினா தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்தவர் என்பது பெருமைக்குரியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்