டெல்லி : ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் நான்காவது இடம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த வீராங்கனை தீபா கர்மாகருக்கு பரிசாக கொடுத்த பிஎம்டபிள்யூ காரை திருப்பித்தர முடிவு செய்துள்ளார்.
பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட வீராங்கனைகளான பி.வி.சிந்து மற்றும் சாக்ஷி மாலிக் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர். பி.வி.சிந்து பேண்மின்டன் பிரிவிலும், சாக்ஷி மல்யுத்த பிரிவிலும் பதக்கம் வென்றனர். இந்தியாவில் இருந்து முதல் முறையாக ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கேற்ற தீபா கர்மாகர் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டு நான்காம் இடம் பெற்றார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இந்த வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவர்களுக்கு இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு பரிசுகளை அறிவித்தன. ஹைதராபாத் பேண்மின்டன் சங்கத்தலைவர் சாமுண்டேஷ்வரநாத் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிசினை வழங்கினார். இந்நிலையில் பரிசாக பெற்ற காரை ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் திருப்பிதர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவரது பெற்றோர் அகர்தலா போன்ற சிறிய நகரில் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பராமரிப்பது கடினம் என்பதால் திருப்பி தருவதாக கூறியுள்ளனர். ஆனால் உண்மையான காரணம் என்னவென்று சொல்லப்படவில்லை.
பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட வீராங்கனைகளான பி.வி.சிந்து மற்றும் சாக்ஷி மாலிக் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர். பி.வி.சிந்து பேண்மின்டன் பிரிவிலும், சாக்ஷி மல்யுத்த பிரிவிலும் பதக்கம் வென்றனர். இந்தியாவில் இருந்து முதல் முறையாக ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கேற்ற தீபா கர்மாகர் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டு நான்காம் இடம் பெற்றார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இந்த வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவர்களுக்கு இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு பரிசுகளை அறிவித்தன. ஹைதராபாத் பேண்மின்டன் சங்கத்தலைவர் சாமுண்டேஷ்வரநாத் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிசினை வழங்கினார். இந்நிலையில் பரிசாக பெற்ற காரை ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் திருப்பிதர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவரது பெற்றோர் அகர்தலா போன்ற சிறிய நகரில் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பராமரிப்பது கடினம் என்பதால் திருப்பி தருவதாக கூறியுள்ளனர். ஆனால் உண்மையான காரணம் என்னவென்று சொல்லப்படவில்லை.