ஆப்நகரம்

டென்மார்க் ஓபன்: நம்பர் 1 விக்டரை வீழ்த்திய கிடாம்பி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உலகின் முதல் நிலை வீரர் விக்டர் அக்செல்சென்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

TNN 21 Oct 2017, 2:58 pm
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உலகின் முதல் நிலை வீரர் விக்டர் அக்செல்சென்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
Samayam Tamil denmark super series attacking kidambi srikanth stuns viktor axelsen in three games
டென்மார்க் ஓபன்: நம்பர் 1 விக்டரை வீழ்த்திய கிடாம்பி


டென்மார்க் சூப்பர் சீரீஸ் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க்கின் விக்டர் அக்செல்சென்னை எதிர்கொண்டார். இப்போட்டியில் முதல் செட்டை 14-21 என இழந்த கிடாம்பி அடுத்தடுத்த செட்களில் ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பரபரப்பான இரண்டாவது செட்டை 22-20 என வென்ற அவர் மூன்றாவது செட்டையும் 21-7 என எளிதில் கைப்பற்றினார். இதன் மூலம் 14-21, 22-20, 21-7 என்ற செட் கணக்கில் விக்டரை தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்துள்ளார்.

முன்னதாக, இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் மற்றும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர் காலிறுதியில் தோற்று வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்