ஆப்நகரம்

இந்தத் தேர்வுமா? சென்னைப் பல்கலை. இணைப் பேராசிரியர் தேர்வுகள் நிறுத்திவைப்பு...

டி.என்.பி.எஸ்.சி குரூப்4, குரூப் 2ஏ தேர்வுகள், சீருடைப்பணியாளர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்றன. இதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்தது. ​​​​இந்நிலையில்,...

Samayam Tamil 22 Feb 2020, 7:00 pm
தமிழ்நாடு முழுக்க தேர்வுகளில் நடக்கும் முறைகேடு தேசிய அளவில் தமிழ்நாட்டுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தற்போது, சென்னை பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் பணிக்கான தேர்வு முறைகளை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
Samayam Tamil high court


டி.என்.பி.எஸ்.சி குரூப்4, குரூப் 2ஏ தேர்வுகள், சீருடைப்பணியாளர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்றன. இதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்தது.

இந்நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் பணிக்கான தேர்வு முறைகளையும் தற்போது உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

உதவிப்பேராசிரியர் சங்கர் வழக்கில் தமிழக அரசும் சென்னை பல்கலைக் கழகமும் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை வரும் பிப்ரவரி 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர், பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதே சமயம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஜனவரி 5 ஆம் தேதி, வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி பேராசிரியர், உதவிப்பேராசிரியர், இணைப்பேராசிரியர் என மொத்தம் 30க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இணை, உதவி பேராசிரியர் தேர்வில் துறைரீதியாக ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்