ஆப்நகரம்

ரீ ட்வீட் செய்த காரெத் பேல்: ரசிகர்கள் உற்சாகம்!

வரலாற்று சிறப்பு மிக்க ஆட்டத்தை ரசிகர்கள் வீட்டிலிருந்தபடியே பார்த்து ரசித்தனர்.

Samayam Tamil 11 Jan 2021, 1:22 pm
மெரின் மற்றும் டோட்டன்ஹாம் மோதியது எஃப்.ஏ கப் ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
Samayam Tamil fa cup


இதில் டோட்டன்ஹாம் 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அவ்வணியின் ஸ்ட்ரைக்கர் வினிசியஸ் ஹாட்டிரிக் அடித்து அசத்தினார்.

எஃப்.ஏ கப்பின் மூன்றாவது சுற்றில் எட்டாம் நிலை அணியான மெரின் அணியை எதிர்கொண்டது முதல் நிலை அணியான டோட்டன்ஹாம். எட்டாம் நிலை அணியுடன் முதல் நிலை அணி மோதுவது இதுவே முதல்முறை.
டெலெஸ், டியர்னி அட்டகாசம்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய யுனைடெட், ஆர்சனல்!
காரத் பேல், டெலி அல்லி போல உலக தரம் வாய்ந்த வீரர்களின் ஆட்டத்தை மிக அருகில் பார்ப்பதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது. ஆனால் மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆட்டத்தை ரசிகர்களால் நேரில் காணமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ரசிகர்கள் பலர் அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆட்டத்தை கண்டுகளித்தனர். ஒருவர் 'என் வீட்டின் ஜன்னல் வழியாக காரெத் பேல் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்' என்று ட்வீட் செய்ய அதை பேல் ரீட்வீட் செய்தார். இந்த ஆட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. கால்பந்தின் அழகு இப்புகைபடங்களில் தெரிகிறது என்று ரசிகர்கள் நெகிழ்ந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்