ஆப்நகரம்

இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள்!

சர்வதேச கிரிக்கெட்டில் இளைஞர்களுக்கு தேர்வுகுழு அதிக வாய்ப்பு வழங்கவேண்டும் என மும்பை கிரிக்கெட் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.

TOI Sports 14 Sep 2016, 12:06 pm
மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இளைஞர்களுக்கு தேர்வுகுழு அதிக வாய்ப்பு வழங்கவேண்டும் என மும்பை கிரிக்கெட் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
Samayam Tamil give youngsters more chances mca tells selectors
இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள்!


இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் இதுவரை சுமார் 41 முறை கோப்பை வென்று மும்பை அணி சாதித்துள்ளது. இதற்கு அணியில் அதிக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதே காரணம் என மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பின் துணைத்தலைவர் திலீப் வென்சர்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வென்சர்கர் கூறியது:
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பின் தேர்வுக்குழுவினர் மிகச்சிறப்பான பணியை செய்துள்ளனர். இதே போல இந்திய தேர்வுக்குழுவும் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க முன்வர வேண்டும். அப்போது தான் இந்திய கிரிக்கெட் இன்னும் பல உச்சங்களை எட்டமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்