ஆப்நகரம்

ஆசிய பாரா போட்டிகள்: இந்தியாவுக்கு ஏழாவது தங்கம் வென்றார் ஹர்விந்தர் சிங்!

ஜகார்த்தா: ஆசிய பாரா போட்டிகளின் வில்வித்தையில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் தங்கப்பதக்கம் வென்றார்.

Samayam Tamil 10 Oct 2018, 3:57 pm
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில், ஆசிய பாராலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் என மொத்தமாக 302 பேர் கலந்து கொள்கின்றனர்.
Samayam Tamil gold for archer harvinder singh at asian para games
ஆசிய பாரா போட்டிகள்: இந்தியாவுக்கு ஏழாவது தங்கம் வென்றார் ஹர்விந்தர் சிங்!


இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டை நடத்தி வருகின்றனர். இதில் இந்திய வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், தனிநபர் ரிக்கர்வ் பிரிவில், சீன வீரர் ஜாவ் லிக்ஸியை 6-0 என வீழ்த்தி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவுக்கு 7வது தங்கப்பதக்கம் கிடைத்தது.

இதேபோல தடகளப்போட்டிகளின் வட்டு எறிதலில் இந்தியாவின் மானு கங்னாஸ், வெள்ளிப்பதக்கமும், குண்டு எறிதலில் யாசீர் வெண்கலப்பதக்கமும் வென்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்