லூதியானா (பஞ்சாப்): பாலியல் வழக்கில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் குற்றமற்றவர் என சிறப்பு புலனாய்வு குழுவினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் மீது, இந்திய வம்சாவழியான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹாக்கி வீராங்கனை அஷாப் கவுர் போகல் என்பவர் பஞ்சாப் மாநிலம் லூதியானா காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கடந்த 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது எனக்கும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக நாங்கள் பழகி வந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்தது.
அதனையடுத்து, எங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவருடன் நெருங்கி பழகியதால் கடந்த 2015-ஆம் ஆண்டு நான் கர்ப்பம் ஆனேன். இதை சர்தாரிடம் தெரிவித்த போது, தற்போது குழந்தை நமக்கு தேவையில்லை. உடனடியாக கர்ப்பத்தை கலைத்துவிடு, இல்லாவிட்டால் நான் உன்னிடம் பேசவும் மாட்டேன், உன்னை தொடர்பு கொள்ளவும் மாட்டேன் என கூறினார்.
மிகவும் நெருக்கடி கொடுத்த அவர் மிரட்டவும் செய்தார். அத்துடன் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொந்தரவு கொடுத்தார். இதனால் எனது பெற்றோருடன் கலந்தாலோசித்து அதன்பின்னர் எனது கருவை கலைத்தேன். ஆனால் அதன் பிறகு சர்தார் சிங் என்னை சந்திப்பதை தவிர்ப்பதுடன் திருமணம் செய்துகொள்ளவும் மறுக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அக்குழுவினர் தங்களது விசாரணை அறிக்கயை தாக்கல் செய்துள்ளனர். அதில், சர்தார் சிங் குற்றமற்றவர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் மீது, இந்திய வம்சாவழியான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹாக்கி வீராங்கனை அஷாப் கவுர் போகல் என்பவர் பஞ்சாப் மாநிலம் லூதியானா காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கடந்த 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது எனக்கும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக நாங்கள் பழகி வந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்தது.
அதனையடுத்து, எங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவருடன் நெருங்கி பழகியதால் கடந்த 2015-ஆம் ஆண்டு நான் கர்ப்பம் ஆனேன். இதை சர்தாரிடம் தெரிவித்த போது, தற்போது குழந்தை நமக்கு தேவையில்லை. உடனடியாக கர்ப்பத்தை கலைத்துவிடு, இல்லாவிட்டால் நான் உன்னிடம் பேசவும் மாட்டேன், உன்னை தொடர்பு கொள்ளவும் மாட்டேன் என கூறினார்.
மிகவும் நெருக்கடி கொடுத்த அவர் மிரட்டவும் செய்தார். அத்துடன் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொந்தரவு கொடுத்தார். இதனால் எனது பெற்றோருடன் கலந்தாலோசித்து அதன்பின்னர் எனது கருவை கலைத்தேன். ஆனால் அதன் பிறகு சர்தார் சிங் என்னை சந்திப்பதை தவிர்ப்பதுடன் திருமணம் செய்துகொள்ளவும் மறுக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அக்குழுவினர் தங்களது விசாரணை அறிக்கயை தாக்கல் செய்துள்ளனர். அதில், சர்தார் சிங் குற்றமற்றவர் என்று கூறப்பட்டுள்ளது.