ஆப்நகரம்

Ilaiyaraaja: சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜா!

சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டியை தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக இசைஞானி இளையராஜா பங்கேற்றார்.

Samayam Tamil 4 Aug 2019, 1:09 pm
இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லுமா என ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டித் தொடரின் போதும் இந்தியர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருப்பது வழக்கமாக உள்ளது.
Samayam Tamil Special Olympics football


இதுவரை ஒலிம்பிக்கில் 1 அல்லது 2,3 என பதக்கங்களை வென்று இந்தியா ஆறுதல் அடைந்து வருகின்றது. தற்போது விளையாட்டில் தீவிரம் காட்டியுள்ள இந்திய அணி, வருங்காலத்தில் ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதன் முதல் படியாக கிரிக்கெட்டைப் போல ஐஎஸ்எல் (கால்பந்து லீக்), பேட்மிண்டன் லீக், புரோ கபடி, டேபில் டென்னின்ஸ் லீக் என பல தொடர்களை நடத்தி அதில் பல வெளிநாட்டு வீரர்களுடன் இந்திய உள்ளூர் வீரர்கள் மோதி அனுபவத்தைப் பெறும் வகையில் போட்டி தொடர்களை நடத்தி வருகின்றது.

சிறப்பு ஒலிம்பிக்:
இந்நிலையில் இந்தியாவில் கால்பந்து போட்டியை பிரபலம் ஆகும் வகையில், சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி தொடர் ஆகஸ்ட் 3 முதல் 6ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

இதில் 15 நாடுகள், 168 வீரர்கள், 21 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டி தொடர் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்