ஆப்நகரம்

ஈரானை பந்தாடி இந்திய அணி சாம்பியன் வென்று அசத்தல்!

துபாயில் நடந்த மாஸ்டர்ஸ் கபடி தொடரில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Samayam Tamil 1 Jul 2018, 7:08 am
துபாய்: துபாயில் நடந்த மாஸ்டர்ஸ் கபடி தொடரில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
Samayam Tamil 8


மாஸ்டர்ஸ் கபடி தொடர் ஆறு நாடுகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, அரையிறுதியில் தென்கொரிய அணியை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஈரான் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்தியா - ஈரான் அணிகள் மோதிய ஃபைனலில் துவக்கம் முதல் இந்திய வீரர்கள் அசத்தினர். முதல் பாதியில் இந்திய அணி 18-11 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்.

இரண்டாவது பாதியில் இந்தியா 28 புள்ளிகளும், ஈரான் 15 புள்ளிகளும் பெற்றது. முடிவில், இந்திய அணி 44-26 என ஈரானை வீழ்த்தி மாஸ்டர்ஸ் கபடி சாம்பியன் பட்டம் வென்றது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்