ஆப்நகரம்

கெஞ்சலுக்கு பிறகு இந்திய கால்பந்து அணிக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் ஆட அனுமதி!

இந்தோனேசியாவின், ஜகார்தாவில் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க, இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Jun 2018, 4:13 pm
இந்தோனேசியாவின், ஜகார்தாவில் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க, இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil indian football team


ஜகார்த்தாவின் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன.

அண்மையில் நடந்து முடிந்த கண்டங்களுக்கிடையேயான கால்பந்து போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பங்கேற்கவே இந்திய கால்பந்து பயிற்சியாளர் ஸ்டீபன் காண்ஸ்டான்டைன் இந்திய அரசிடம் பல கோரிக்கைகளை வைத்த பின்னர் இந்திய கால்பந்து அணி விளையாட அனுமதி கிடைத்தது.

ஆசிய விளையாட்டு போட்டி:
இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கால்பந்து அணி பங்கேற்க காண்ஸ்டான்டைன் அனுமதி கேட்டிருந்தார்.இதற்கு இந்திஅ அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் பெண்கள் அணிக்கு அனுமதிக்கான பச்சைக்கொடி காட்டப்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது யு-23 போட்டியாகும். இந்திய அணியில் 23 வயதுக்குட்பட்ட வீரர்கள் 11 பேர் உள்ளனர். அவர்கள் ஆசிய போட்டியில் விளையாட முடிந்தால், அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய நன்மையாக அமையும் என இந்திய கால்பந்து அணி கூறியுள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்