ஆப்நகரம்

தங்க மங்கை மணிகா பத்ராவுக்கு அர்ஜுனா விருது!

21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் உட்பட 4 பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 21 Apr 2018, 4:35 pm
21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் உட்பட 4 பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைப்பட்டுள்ளனர்.
Samayam Tamil 15manika1


21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா தங்கப் பதக்கத்தைப் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் காமன்வெல்த் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் இரட்டையர் பிரிவில் வெள்ளியும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலமும் வென்றார். இத்துடன் இந்திய அணி தங்கம் வெல்வதற்கும் முக்கியப் பங்காற்றினார்.

இதனையடுத்து, இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு மணிகா பத்ராவின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது. கண்டிப்பாக மணிகா பத்ராவின் சாதனைக்கு விருது வழங்கப்படும் என்றும் அந்தக் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஸ்வீடனில் நடைபெற உள்ள உலக அளவிலான அணிகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் மணிகா பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்