ஆப்நகரம்

சர்வதேச வில்வித்தைப் போட்டியில் வெண்கலம் வென்றார் தீபிகா!

தாய்லாந்தில் நடந்த சர்வதேச வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்

TNN 5 Dec 2017, 4:30 am
தாய்லாந்தில் நடந்த சர்வதேச வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
Samayam Tamil indias deepika kumari won the bronze medal in the world cup archery in thailand
சர்வதேச வில்வித்தைப் போட்டியில் வெண்கலம் வென்றார் தீபிகா!


தாய்லாந்தில் உள்ள பேங்காக்கில் உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இதில் ரீகர்வ் பிரிவில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தீபிகா குமாரியும், ரஷ்யாவைச் சேர்ந்த சயானா தைஷ்ரெம்பிலோவா ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய தீபிகா, 7-3 என்ற கணக்கில் சயானாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக நடைப்பெற்ற போட்டியில் கொரிய வீராங்கனை கிம் சுரினிடம் தோற்றதால் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தீபிகா இழந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்