ஆப்நகரம்

நரசிங் இடம் யாருக்குமில்லை !

ரியோ ஒலிம்பிக்கிற்கு மல்யுத்தவீரர் நர்சிங் யாதவ் போகவில்லை என்றால் அவரது இடம் யாருக்கும் வழங்கப்படமாட்டாது என இந்திய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

TOI Contributor 24 Jul 2016, 4:33 pm
சென்னை: ரியோ ஒலிம்பிக்கிற்கு மல்யுத்தவீரர் நர்சிங் யாதவ் போகவில்லை என்றால் அவரது இடம் யாருக்கும் வழங்கப்படமாட்டாது என இந்திய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
Samayam Tamil indias quota will go empty if narsingh doesnt go to rio
நரசிங் இடம் யாருக்குமில்லை !


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த மாதம் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகிறது. இதன் மல்யுத்த போட்டியின் ஆண்கள் 74 கி.கி., எடைப்பிரிவில் பங்கேற்க இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார்.

ஆனால் கடந்த மாதம் இந்திய விளையாட்டு ஆணையம் அவருக்கு நடத்திய ஊக்கமருந்து சோதனையின் முடிவு அவருக்கு எதிராக இருப்பதால் அவரது ஒலிம்பிக் கனவு கிட்டத்தட்ட பறிபோகியுள்ளது.

இதையடுத்து இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசில் குமார் இதே எடைப்பிரிவில் கலந்து கொள்வார் என பேசப்பட்டது. இதற்கு தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் ராமசந்திரன் ஸ்ரீனிவாசன் கூறியது: நரசிங் யாதவ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லவில்லை என்றால். அந்த இடம் வெற்றிடமாகத்தான் இருக்குமே தவிர, மாற்றுவீரரை அனுப்ப முடியாது. சுசில்குமார் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளை வெல்லவில்லை. அதனால் அவர் பங்கேற்ப்பது சாத்தியமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்