ஆப்நகரம்

என்ன கொடுமை சார் இது.....? : புலம்பும் பெடரர்!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி தோல்வி மிகவும் கொடுமையானது என சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Jul 2018, 1:29 pm
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி தோல்வி மிகவும் கொடுமையானது என சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 3


சர்வதேச டென்னிஸ் அரங்கில் கிராண்ட்ஸ்லாம் அந்துஸ்து பெற்ற பாரம்பரிய டென்னிஸ் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 132வது தொடர், லண்டனில் கடந்த 2ம் தேதி துவங்கியது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தென் ஆப்ரிக்காவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். இதில் முதல் இரண்டு செட்டை 6-2, 7-6 என கைப்பற்றிய பெடரர், அடுத்த நடந்த மூன்று செட்களையும் 5-7, 4-6, 11-13 என கோட்டைவிட்டு அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ரொம்ப கொடுமை.......
இந்த தோல்வி குறித்து பெடரர் கூறுகையில்,‘ உண்மையில் மனதளவில் எனக்கு எவ்வித சோர்வும் இல்லை. ஆண்டர்சனை எதிர்க்கொள்ள நான் முழுமையாக தயாராகவில்லை என நினைக்கிறேன். முதல் இரண்டு செட்களை வென்ற பின், தொடர்ந்து மூன்று செட்களை இழந்தது மிகவும் கொடுமையான விஷயம். இருந்தாலும் அதான் போட்டியின் முடிவு ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.’ என்றார்.

LONDON: Roger Federer admitted he was shell-shocked as the Swiss star struggled to come to terms with his "terrible" Wimbledon quarter-final exit against Kevin Anderson.

அடுத்த செய்தி

டிரெண்டிங்