ஆப்நகரம்

ஊக்க மருந்து வீரருக்கு அல்ல, தடகளப் போட்டிக்கே மரணத்தை ஏற்படுத்திவிடும் : உசைன் போல்ட்

ஊக்க மருந்து வீரரை அல்ல, தடகளப் போட்டியையே மரணத்தை ஏற்படுத்தும் : உசைன் போல்ட்

TNN 2 Aug 2017, 2:35 pm
விளையாட்டுப் போட்டிகளில், ஊக்கமருந்து பயன்படுத்தும் வீரர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil jamaican sprinter says dopers must stop or athletics will die usain bolt
ஊக்க மருந்து வீரருக்கு அல்ல, தடகளப் போட்டிக்கே மரணத்தை ஏற்படுத்திவிடும் : உசைன் போல்ட்


ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கப்பதக்கம் வென்ற உசைன் போல்ட், லண்டனில் நாளை மறுநாள் தொடங்கி 13ம் தேதி வரை நடக்கும் தடகளப் போட்டிகளில் கலந்து கொள்கிறார். இந்த போட்டியில் கலந்து கொள்ள வந்த போல்ட் ஊடகங்கள் முன் பேசினார்.

அதில், “விளையாட்டு போட்டிகளில் ஊக்க மருந்து பயன்படுத்தும் வீரர்களை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி தடுத்து நிறுத்தப்படாவிட்டால், விரைவில் தடகளப் போட்டியே மரணமடையும். எனக்கு பிறகு தென் ஆப்ரிக்காவின் வான் நீகெர்க் சாம்பியனாக இருப்பார். ஏனெனில் அவரின் வேகம் மிரள வைக்கிறது.” என தெரிவித்துள்ளார். லண்டன் தடகளப்போட்டியுடன் உசைன் போல்ட் ஓய்வு பெற உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்