ஆப்நகரம்

கபடியில் ஆதிக்கத்தை காட்டிய இந்தியா - பாகிஸ்தானை வென்று சாதனை

கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018 போட்டியின் முதல் போட்டியிலேயே இந்தியா, பாகிஸ்தானை வென்று அசத்தியுள்ளது.

Samayam Tamil 22 Jun 2018, 11:12 pm
கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018 போட்டியின் முதல் போட்டியிலேயே இந்தியா, பாகிஸ்தானை வென்று அசத்தியுள்ளது.
Samayam Tamil INDvPAK


துபாயில் கபடி மாஸ்டர் 2018 போட்டிகள் நடைப்பெறுகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென் கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய 6 அணிகள் மோதுகின்றன.

இதில் இந்தியா, பாகிஸ்தான், கென்யா ஆகிய மூன்று அணிகள் ஒரு பிரிவிலும், தென் கொரியா, அர்ஜெண்டினா, ஈரான் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும் விளையாடுகின்றன. ஒரு பிரிவில் ஒரு அணி மற்ற அணியுடன் இரு முறை விளையாடும்.

பாகிஸ்தானை வென்ற இந்தியா:இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் அஜய் தாகூர் தலைமையிலான இந்திய அணி, வாசிம் சஜத் தலைமையிலான பாகிஸ்தான் அணியை 36 - 20 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்