ஆப்நகரம்

டென்மார்க் ஓபன்: கிடாம்பி இறுதிக்குத் தகுதி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதியில் ஹாங்காங் வீரர் வின்சென்ட் வாங் விங் கீயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.

TNN 21 Oct 2017, 9:08 pm
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதியில் ஹாங்காங் வீரர் வின்சென்ட் வாங் விங் கீயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
Samayam Tamil kidambi beats vincent wong wing ki to enter denmark open final
டென்மார்க் ஓபன்: கிடாம்பி இறுதிக்குத் தகுதி


டென்மார்க் சூப்பர் சீரீஸ் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஹாங்காங் வீரர் வின்சென்ட் வாங் விங் கீயை எதிர்கொண்டார். இப்போட்டியில் முதல் செட்டை 21-18 என அதிரடியாக கைப்பற்றினார் கிடாம்பி.

அனல் பறந்த அடுத்தடுத்த செட்டில் இருவரும் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடினர். ஒரு கட்டத்தில் 12-12 என இருவரும் சமநிலையில் இருந்தனர். பின்னர், ஆட்டத்தில் வேகம் கூட்டிய ஸ்ரீகாந்த் 21-17 என இரண்டாவது செட்டையும் தனதாக்கினார்.

இதன் மூலம் 21-18, 21-17 என்ற நேர் செட்களில் வின்சென்ட்டை தோற்கடித்து இறுதிப்போட்டியில் அடியெடுத்து வைத்தார்.

முன்னதாக, இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் மற்றும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர் காலிறுதியில் தோற்று வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்