ஆப்நகரம்

டென்னிஸ் உலகின் முடிசூடா ராணி மரிய ஷரபோவா 32 வயதில் ஓய்வு...

டென்னிஸ் உலகை தள்ளி வைத்துவிட்டு வாழ்வது முடியாத ஒன்று. இது எனக்கு புதியதாக இருக்கிறது. என்னை மன்னித்துவிடு டென்னிஸ் - ஷரபோவா

Samayam Tamil 27 Feb 2020, 3:12 pm
டென்னிஸ் உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த மரிய ஷரபோவா தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார். 28 வருடங்களில் 5 கிராண்ட்ஸ்லாம் (Grand-slam) பட்டம் பெற்று சாதனை படைத்தவரும், 17 வயதில் விம்பில்டன் பட்டம் வென்றவருமான மரிய ஷரபோவாவுக்கு தற்போது வயது 32தான்.
Samayam Tamil maria sharapova


2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலி மகளீர் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற போது ஊக்க மருத்து சோதனையில் மரிய ஷரபோவா சிக்கினார். பரிதோசனையில் அவர் மெல்டோனியம் என்கிற - புதியதாக ஊக்க மருந்து பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த - ஊக்க மருத்தை உட்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, ஷரபோவா விளையாடத் தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், இதனை எதிர்த்து விளையாட்டு துறைக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டார் ஷரபோவா. முடிவில், நீதிமன்றம் இவருக்கான தண்டைனை மற்றும் அபதாரத்தை குறைத்தது.

இவர் ஊக்க மருத்தை அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாகவே தான் எடுத்திருக்கிறார் என்றும், ஊக்க மருத்தை வேண்டுமென்றே எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்த நீதிமன்றம் , இவரது தண்டனையையும் அபராதத்தையும் குறைப்பதில் தவறில்லை” என்று தெரிவித்திருந்தது.

தடைக்குப் பின்னர், ஷரபோவா 2017ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிக்கு திரும்பினார். முன்பை போல் அவரால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. ஊக்க மருந்து தடைக்குப்பின் அவர் மொத்தம் 73 போட்டிகளில் பங்கேற்று 45 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றார். அதில், ஒரு பதக்கம் மற்றும் ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கால் இறுதி வரை முன்னேறியிருந்தார்.

டென்னிஸ் உலகைத் தள்ளி வைத்துவிட்டு வாழ்வது முடியாத ஒன்று. இது எனக்குப் புதியதாக இருக்கிறது. என்னை மன்னித்துவிடு டென்னிஸ்
ஷரபோவா

எனினும் தடைக்குப்பின் அவரின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டிருந்தது. இதனை முன்னிட்டே, அவர் இப்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

என்னை மன்னித்துவிடு டென்னிஸ்:

இதுகுறித்து தான் அளித்த ஓய்வு அறிவிப்பு கடிதத்தில், “எனக்கு தெரிந்த ஒரே வாழ்க்கை டென்னிஸ். இனி இதைப் பிரிந்து நான் எப்படி வாழப்போகிறேன் என்று தெரியவில்லை, சிறுவயதில் இருந்து நேசித்த ஒரு விளையாட்டை, எனக்கு பயிற்சியளித்த மைதானத்தை, விவரிக்க முடியாத சந்தோஷங்களை அளித்த டென்னிஸ் உலகை தள்ளி வைத்துவிட்டு வாழ்வது முடியாத ஒன்று. இது எனக்கு புதியதாக இருக்கிறது. என்னை மன்னித்துவிடு டென்னிஸ்” என்று தனது கடித்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

சிறுவயதில் இருந்து தான் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றது தொடர்பாகவும், மறக்க முடியாத நினைவுகள், வெற்றிபெற்ற தருணங்கள், ஊக்க மருத்து தடையால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தார் என்ற நினைவுகளையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.


தனது 17 வயதில் விம்பில்டன் இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்ஸை தோற்கடித்து விம்பில்டன் பட்டத்தை வென்றிருந்தார். அப்போது ஒட்டுமொத்த டென்னிஸ் உலகமே மரிய ஷரபோவாவை ஆச்சரியத்துடன் பார்த்தது. அன்றுமுதல் இன்று வரை டென்னிஸ் உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். அவரின் திடீர் ஓய்வு அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்