ஆப்நகரம்

குழந்தையின் மரணத்தை அணிக்கு தெரிவிக்காமல், வெற்றிக்காக பாடுபட்ட கால்பந்து வீரர்!

ஈராக்கில் நடைபெற்று வரும் கால்பந்து லீக் போட்டியில், கோல் கீப்பர் ஒருவர் தனது குழந்தை இறந்ததை மறைத்து தனது அணியின் வெற்றிக்காக போராடியது அனைவரையும் கலங்க வைத்துள்ளது

Samayam Tamil 18 Feb 2018, 7:18 pm
ஈராக்: ஈராக்கில் நடைபெற்று வரும் கால்பந்து லீக் போட்டியில், கோல் கீப்பர் ஒருவர் தனது குழந்தை இறந்ததை மறைத்து தனது அணியின் வெற்றிக்காக போராடியது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
Samayam Tamil naft maysan goalkeeper ahmad hides daughters death plays key role in important game
குழந்தையின் மரணத்தை அணிக்கு தெரிவிக்காமல், வெற்றிக்காக பாடுபட்ட கால்பந்து வீரர்!


ஈராக்கில் நடைபெற்று வரும் கால்பந்து லீக் போட்டியில், நப்ட் மேசன் என்ற அணியில் அல்லா அஹமது என்பவர் கோல் கீப்பராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவரின் அணி பலம் வாய்ந்த அணியான அல்-சார்டா என்ற அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்குவதற்கு சில மணிநேரத்திற்கு முன், அல்லா அஹமதுவின் பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக அவருக்கு செய்தி வந்துள்ளது. இந்தச் செய்தி அணியினருக்கோ அல்லது பயிற்சியாளாருக்கோ தெரிந்தால், தன்னை விளையாட அனுமதிக்கமாட்டார்கள் என்று அதை மறைத்துள்ளார்.

இதையடுத்து நடைபெற்ற போட்டியில், பலம்வாய்ந்த அந்த அணியை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தனர். போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட அல்லா அஹமதுவைப் பாராட்ட சென்றபோது, அவர் கண்ணீர் விட்டு அழுததைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதன்பின், அவர் குழந்தையின் மரண செய்தியைக் கேட்டு அனைவரும் மிகவும் வருத்தத்துக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், அவருக்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர். தன் அணியின் வெற்றிக்காக குழந்தையின் மரணத்தையும் தாங்கிக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரைக் கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்