ஆப்நகரம்

ஜோகோவிச்சின் நிம்மதியை அடுத்ததடுத்து பறிக்கும் முர்ரே!

ஜோகோவிச்சிடமிருந்து ‘நம்பர்-1’ இடத்தை பறித்த ஆண்டி முர்ரே, தனது அடுத்த திட்டத்தை தீட்டிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

TOI Sports 7 Nov 2016, 3:02 pm
பாரிஸ்: ஜோகோவிச்சிடமிருந்து ‘நம்பர்-1’ இடத்தை பறித்த ஆண்டி முர்ரே, தனது அடுத்த திட்டத்தை தீட்டிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil now no 1 murray goes to london vying for djokovics title
ஜோகோவிச்சின் நிம்மதியை அடுத்ததடுத்து பறிக்கும் முர்ரே!


சமீபத்தில் நடந்த பாரிஸ் ஓபன் தொடரில் பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே, சாம்பியன் பட்டம் வென்றார். இதோடு இவருக்கு ஜாக்பாட்டாக செர்பியவீரர் ஜோகோவிச்சின் ‘நம்பர்-1’ இடமும் இவருக்கு இலவசமாக கிடைத்தது.

ஆனால் இவர் இதோடு நிறுத்தாமல், அடுத்ததாக அவருடைய ஏ.டி.பி., பைனல் பட்டத்தையும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து முர்ரே கூறியது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடைய ஆட்டம் திருப்தி அளிக்கும் விதத்தில் அமையவில்லை. தவிர, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், பல முறை பட்டத்தை நெருங்கியும் அதை எட்டமுடியவில்லை. அதனால் என்னுடைய அடுத்த இலக்கு அதை அடைவது தான். தற்போது ஜோகோவிச்சிடம் உள்ள, ஏ.டி.பி., கோப்பையை கைப்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்