ஆப்நகரம்

ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டையில் தங்கம் வென்ற ஷிவ தபா, பூஜா ராணி!

டோக்கியோ: ஜப்பானில் நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஷிவ தபா, பூஜா ராணி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று சாதித்தனர்.

Samayam Tamil 31 Oct 2019, 2:04 pm
ஜப்பானின் டோக்கியோவில் குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தது. இதன் ஆண்கள் 63 கி.கி., எடைப் பிரிவின் ஃபைனலில் இந்தியாவின் ஷிவ தபா, கஜகஸ்தானின் தேசிய சாம்பியன் மற்றும் ஆசிய வெண்கலப்பதக்கம் வென்ற சனாடலி டோல்யாயேவை எதிர் கொண்டார்.
Samayam Tamil Shiva Thapa


இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஷிவ் தபா, இறுதியில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

இதே போல ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற பூஜா ராணி, ஆஸ்திரேலிஒயாவின் கெய்த்லின் பார்க்கணை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் ஆஷிஸ் , 69 கி.கி., பிரிவில் ஜப்பானின் சீவான் ஒகஹாசாவாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

முன்னதாக மற்ற இந்திய வீரர்களான நிஹத் ஜரின் (51 கி.கி.,), சிம்ரன்ஜீத் கவுர் (60 கி.கி.,), சுமித் சங்வான் (91 கி.கி.,), வஹ்லிம்புயா (75 கி.கி.,) ஆகியோர் தங்களின் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்