ஆப்நகரம்

இவ்வளவு கூட வரதட்சணை வாங்க முடியுமா?-அசத்திய மல்யுத்த வீரர்..!

தனது திருமணத்திற்கு ஒரு ரூபாயை வரதட்சணையாக வாங்கியுள்ளார் இந்திய மல்யுத்த வீரரான யோகேஸ்வர் தத்.

TNN 15 Jan 2017, 2:35 pm
தனது திருமணத்திற்கு ஒரு ரூபாயை வரதட்சணையாக வாங்கியுள்ளார் இந்திய மல்யுத்த வீரரான யோகேஸ்வர் தத்.
Samayam Tamil olympic wrestler yogeshwar dutt asks one rupee as a dowry for his marriage
இவ்வளவு கூட வரதட்சணை வாங்க முடியுமா?-அசத்திய மல்யுத்த வீரர்..!


வரதட்சணை என்பது பெண்ணுரிமைக்கு எதிரானது என்றாலும்,இன்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திருமணத்தின் போது வரதட்சணை பெறுவது வழக்கமாக இருக்கிறது.வரதட்சணை காரணமாக பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வந்தாலும்,பணத்தாசை பிடித்த பலர் அந்த வழக்கத்தை விடுவதாக இல்லை.

ஆனால் இது போன்ற ஆசாமிகளுக்கு செருப்படி கொடுப்பது போல் ஒரு காரியத்தை செய்துள்ளார் இந்திய மல்யுத்த வீரரும்,ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்றவருமான யோகேஸ்வர் தத்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த யோகேஸ்வர் தத்துக்கும்,அதே மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ்வாதியான ஜெய் பகவான் சர்மா என்பரின் மகளான ஷீத்தல் என்பவருக்கும் நாளை டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளது.இந்நிலையில் தனது திருமணத்திற்கு வரதட்சணையாக ஒரு ரூபாயை பெண் வீட்டாரிடம் கேட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார் யோகேஸ்வர் தத்.

”எனது சகோதரிகளின் திருமணத்திற்கு , வரதட்சணை பணம் கொடுப்பதற்காக என் குடும்பத்தினர் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதை கண்கூடாக நான் பார்த்துள்ளேன்.எனவே நான் வளரும் போதே இரண்டு காரியங்களை செய்ய வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டேன்.ஒன்று நான் மல்யுத்தத்தில் சாதித்து என் குடும்ப வறுமையை போக்க வேண்டும் என்பது.இரண்டாவது என்னுடைய திருமணத்திற்கு ஒரு ரூபாய் மட்டுமே வரதட்சணையாக பெற வேண்டும் என்பது.இரண்டையுமே இப்போது நிறைவேற்றிவிட்டேன்.”என யோகேஸ்வர் தத் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு ஆசைகளும் தனது தந்தை ராம் மெஹர் தத் மற்றும் தன்னுடைய குரு சத்பிர் சிங் ஆகியோர் உயிரோடு இருக்கும் போதே நிறைவேற வேண்டும் என யோகேஸ்வர் தத் நினைத்தாராம்.அதைப் போலவே நடந்திருப்பதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார் அவர்.

Olympic wrestler Yogeshwar Dutt asks one rupee as a dowry for his marriage

அடுத்த செய்தி

டிரெண்டிங்