ஆப்நகரம்

என்னை குறைசொல்லியவர்கள் இன்று என்னுடன் செல்பி எடுக்கிறார்கள்!

ஒருகாலத்தில் என்னை குறை சொல்லியவர்கள் இன்று என்னுடன் செல்பி எடுக்கவிரும்புகிறார்கள் என மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக் தெரிவித்துள்ளார்.

TOI Sports 7 Sep 2016, 10:06 pm
மும்பை: ஒருகாலத்தில் என்னை குறை சொல்லியவர்கள் இன்று என்னுடன் செல்பி எடுக்கவிரும்புகிறார்கள் என மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil people who would taunt me now click pictures with me sakshi malik
என்னை குறைசொல்லியவர்கள் இன்று என்னுடன் செல்பி எடுக்கிறார்கள்!


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. இதன் பெண்கள் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலம் வென்றார். ஹரியானாவில் தனியார் நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சி சார்பில் கலந்து கொண்ட சாக்‌ஷி மாலிக், தன்னை மதிக்காதவர்கள் கூட தற்போது தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ளவிரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சாக்‌ஷி மாலிக் கூறியது:
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் மக்களின் பார்வையே என் மீது வேறு மாதிரியாக உள்ளது. இரண்டு பேர் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். என்கையை எடுத்து அவர்கள் மீது வைத்து குழந்தைகளை ஆசிர்வதிக்க சொல்கிறார்கள். பெண் என்பதால் என்னை பல முறை புறக்கணித்தனர். ஆனால் தற்போது என்னுடன் பலர் செல்பி எடுக்கவிரும்புகிறார்கள். இது எனக்கு பல மாற்றத்தை உணர்த்துகிறது. கடந்த 2010ல் காமன்வெல்த் போட்டிகளின் போது 5 முதல் ஆறு பெண்கள் இரண்டு அல்லது மூன்று மேட்களில் பயிற்சி மேற்கொண்டோம். ஆனால் தற்போது பெண்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு சாக்‌ஷி மாலிக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்