ஆப்நகரம்

உலக சாம்பியனான 14 வயது பிரக்ஞானானந்தா!

மும்பை: 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தின் பிரக்ஞானானந்தா தங்கப்பதக்கம் வென்று சாதித்தார்.

Samayam Tamil 14 Oct 2019, 10:37 am
மும்பையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயதான பிரக்ஞானானந்தா பங்கேற்றார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானானந்தா 10 சுற்றில் 7 வெற்றி, 3 டிரா என மொத்தமாக 8.5 புள்ளிகள் பெற்றார்.
Samayam Tamil Praggnanandhaa


தொடர்ந்து நடந்த கடைசி சுற்றில் பிரக்ஞானானந்தா ஜெர்மனி வீரர் வேலன்டினை எதிர்கொண்டார். இதில் போட்டியின் 34வது நகர்த்தலின் போது பிரக்ஞானானந்தா போட்டியை டிரா செய்தார். இதன் மூலம் மேலும் 9.0 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று சாதித்தார்.


உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் மொத்தமாக 3 வெள்ளிப்பதக்கம் உட்பட, மொத்தமாக 6 பதக்கம் வென்று அசத்தினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்