ஆப்நகரம்

பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி; இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து, எச்.எஸ். பிரனோய், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

TOI Contributor 27 Oct 2017, 5:41 am
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து, எச்.எஸ். பிரனோய், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
Samayam Tamil prannoy srikanth sindhu enters quarterfinals of french open badminton
பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி; இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்


பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் சயாகா தகாஹசியை எதிர்கொண்டார். இப்போடியில் 21-14, 21-13 என்ற செட்கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரனோய், டென்மார்க்கின் ஹன்ஸ்-கிரிஸ்டியன் விட்டிங்கசை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் 21-11, 21-12 என்ற நேர் செட்களில் எச்.எஸ். பிரனோய் வெற்றி பெற்றார்.

இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் - சீனா வீரர் வோங் விங் கீ ஆகியோர் களம் கண்டனர். இப்போட்டியில், கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் - ஜப்பான் வீரர் கெண்டா நிஷிமோடோவை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில், சாய் பிரனீத் 13-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து இத்தொடரைவிட்டு வெளியேறினார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் - ஜப்பானின் அகேன் யமகுச்சி ஆகியோர் மோதினர். இப்போட்டியில் 21-9, 23-21 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீராங்கனை வெற்றி பெற்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்