ஆப்நகரம்

ஹாக்கி ஸ்டிக்கால் தாறு மாறாக அடித்துக்கொண்ட வீரர்கள்: போர்களமான மைதானம்!

புதுடெல்லி: நேருக் கோப்பை ஃபைனலில் பஞ்சாப் போலீஸ் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர்கள் மாறி மாறி அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Nov 2019, 11:35 am
டெல்லியின் நேஷல் மைதானத்தில் நேருக் கோப்பை ஹாக்கி போட்டி நடந்தது இப்போட்டியில் பஞ்சாப் போலீஸ் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் மோதின. இந்நிலையில் இப்போட்டிக்கு இடையே இரு அணி வீரர்களும் ஹாக்கி ஸ்டிக்கால் அடித்துக்கொண்ட சம்பவம் அரங்கேறியது.

வைரலான வீடியோ...
ஹாக்கி மைதானத்திலேயே வீரர்கள் ஹாக்கி ஸ்டிக்கால் மாறி மாறி ரவுடிகள் போல அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிவப்பு நிற ஜெர்சி அணிந்துள்ள வீரர்கள் பஞ்சாப் போலீஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள். இவர்கள் தான் நேஷனல் வங்கி அணி வீரர்களை ஓட ஓட ஆக்ரோஷமாக அடித்தனர்.

தொடர்ந்த போட்டி
இதையடுத்து பரபரப்பு நீடித்தது. அதற்குபின் சண்டையில் ஈடுபட்ட வீரர்கள் வெளியேற்றப்பட்டு, இரு அணிகளிலும் தலா 8 வீரர்களுடன் போட்டி தொடரப்பட்டது. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி 6-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கடும் நடவடிக்கை
இந்த அசம்பாவிதம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரேந்தர் பத்ரா கூறுகையில், “ பொறுப்புப்பில்லாத அணி மற்றும் கவனக்குறைவான நிர்வாகம் ஹாக்கி போட்டியின் நற்பெயரை இவர்கள் கெடுத்துவிட்டனர். தவறு செய்த வீரர்கள் மீது ஹாக்கி இந்தியா அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும். ” என்றார்.

போட்டிகளை மாற்றிக்கொண்ட மும்பை, ஹைதராபாத் மைதானங்கள்... இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அட்டவணை!

நிச்சயமாக
இதுதொடர்பாக ஹாக்கி இந்தியா சி.இ.ஓ. எலினா நார்மன் கூறுகையில், “தொடர் அதிகாரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் தான் ஹாக்கி இந்தியா நடவடிக்கை எடுக்கும்.” என்றார். இரு அணிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பஞ்சாப் போலீஸ் அணிக்கு 4 ஆண்டுகளும், நேஷனல் வங்கி அணிக்கு 2 ஆண்டுகளும் தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்