ஆப்நகரம்

கலெக்டர் ஆனார் பிவி சிந்து

சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கி கெளரவித்துள்ளது.

TOI Sports 24 Feb 2017, 3:34 pm
சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கி கெளரவித்துள்ளது.
Samayam Tamil pv sindhu accepts deputy collector job
கலெக்டர் ஆனார் பிவி சிந்து


1995ல் பிறந்த பிவி சிந்து கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இதனால் பல்வேறு மாநிலங்களிலிருந்து அவருக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.



இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, நகரின் முக்கிய இடத்தில் 1000 சதுர அடி நிலம் வழங்கியுள்ளார். அதோடு அவருக்கு துணை ஆட்சியர் பதவி வழங்குவதாக அறிவித்தார். தற்போது அதை பிவி சிந்து ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நெவால் மற்றும் பிவி சிந்து ஆகியோர் மட்டும் பேட்மிண்டனில் பதக்கம் வென்று அசத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்