ஆப்நகரம்

உலக சாம்பியன்ஷிப் : அரையிறுதியில் நுழைந்த பி.வி. சிந்து: பதக்கத்தை உறுதி செய்து அசத்தல்!

பசல்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் பி.வி. சிந்து தகுதி பெற்றார்.

Samayam Tamil 23 Aug 2019, 6:51 pm
சுவிட்சர்லாந்தின் பசலில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிவி சிந்து, சீன தைபேவின் தாய் சூ யிங்கை சந்தித்தார்.
Samayam Tamil PV Sindhu


இதில் துவக்கத்தில் சொதப்பிய சிந்து, முதல் செட்டை 12-21 என இழந்தார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் அசத்திய சிந்து 23-21 என பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில் மிரட்டிய சிந்து, 21-19 என தனதாக்கினார்.

முடிவில், இந்தியாவின் பிவி சிந்து, சீன தைபேவின் தாய் சூ யிங்கை 12-21, 23-21, 21-19 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.


ஐந்தாவது பதக்கம் உறுதி:
இந்த வெற்றியின் மூலம் பிவி சிந்து, இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். முன்னதாக கடந்த 2013 மற்றும் 2014ல் வெண்கலப்பதக்கம் வென்ற சிந்து , கடந்த 2017 மற்றும் 2018ல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்