ஆப்நகரம்

மெக்கா ஓபன் பேட்மிண்டன் போட்டியை உதறி தள்ளிய பிவி சிந்து

சாய்னா நேவலுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து, சமீபத்தில் சீன ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்றார்.

TOI Sports 29 Nov 2016, 9:28 am
சாய்னா நேவலுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து, சமீபத்தில் சீன ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்றார். அதன் பின் ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனில் இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிலையில் நவம்பர் 29- டிசம்பர் 4 வரை நடைபெறும் மெக்கா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரு ந்து பிவி சிந்து கடைசி நேரத்தில் விலகியுள்ளார்.
Samayam Tamil pv sindhu pulls out saina nehwal to lead india in macau open
மெக்கா ஓபன் பேட்மிண்டன் போட்டியை உதறி தள்ளிய பிவி சிந்து


சீனா, ஹாங்காங்கில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்ற பிவி சிந்து, மெக்கா ஓபன் பேட்மிண்டனிலிருந்து விலகுவதற்கான காரணத்தை கூறியுள்ளார். ””எனது இலக்கு துபாய் சூப்பர் சீரிஸில் (டிசம்பர் 14-18) பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான்.

சீனா, ஹாங்காங் என அடுத்தடுத்த போட்டியில் பங்கேற்றதனாலும், துபாய் சூப்பர் சீரிஸில் பங்கேற்க தேவையான பயிற்சியை எடுப்பதற்காகவும், மெக்கா பேட்மிண்டன் போட்டியிலிருந்து விலகியுள்ளாதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்