ஆப்நகரம்

சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய சந்திரபாபு நாயுடு !

பி.வி. சிந்துவுக்கு நடந்த பாராட்டுவிழாவின் போது அவருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாலியாக பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார்.

TOI Sports 23 Aug 2016, 1:26 pm
விஜயவாடா: பி.வி. சிந்துவுக்கு நடந்த பாராட்டுவிழாவின் போது அவருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாலியாக பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார்.
Samayam Tamil pvsindhu plays badminton with andhra pradesh cm chandrababu naidu in vijaywada
சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய சந்திரபாபு நாயுடு !


பிரேசிலின் ரியோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கணை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார். இதற்காக இவருக்கு தெலுங்கானா அரசு நேற்று பாராட்டு விழா நடத்தியது.


இதையடுத்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று அவருக்கு பாராட்டு விழாநடக்கிறது. இதில் கலந்து கொள்ள வந்த சிந்துவுக்கு செல்லும் வழிமுழுவதும் மக்கள் குவிந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இதில் முதலில் சிந்துவுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு, சிந்துவுக்கு மலர் கொத்து கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
WATCH: #PVSindhu plays badminton with Andhra Pradesh CM Chandrababu Naidu in Vijaywadahttps://t.co/4JsOblEff6— ANI (@ANI_news) August 23, 2016
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் பின் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிந்துவுடன் விழா மேடையிலேயே ஜாலியாக பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார். இவ்விழாவில் சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்தும் கலந்து கொண்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்