ஆப்நகரம்

வரலாறு படைக்கும் வாய்ப்பை தவறவிட்ட தமிழக வீரர் ராம்குமார்!

சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைக்கும் வாய்ப்பை தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் தவறவிட்டார்.

Samayam Tamil 23 Jul 2018, 8:51 pm
புதுடெல்லி: சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைக்கும் வாய்ப்பை தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் தவறவிட்டார்.
Samayam Tamil 5


ரோட் தீவுகளில் ஹால் ஆப் பேம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலுக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் முன்னேறினார். ஃபைனலில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை, ராம்குமார் எதிர்கொண்டார்.

இதில் ராம்குமார் 5-7, 6-3, 2-6 என்ற செட்களில் தோல்வியடைந்தார். இதன் மூலம் ஆண்களுக்கான ஏ.டி.பி., தனிநபர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைக்கும் வாய்ப்பை ராம்குமார் தவறவிட்டார்.

முன்னதாக ஆண்களுக்கான ஏ.டி.பி., தனிநபர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர் லியாண்டர் பயஸ். இவர் கடந்த 1998 இதே ஹால் ஆப் பேம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். இந்நிலையில் சுமார் 20 ஆண்டுக்கு பின் கிடைத்த வாய்ப்பை ராம்குமார் தவறவிட்டார்.

NEW DELHI: A "calmer and focussed" Ramkumar Ramanathan is not crying over losing out on the chance to create history in Indian tennis and he would rather savour the priceless moment of earning his maiden singles final on ATP World Tour.

அடுத்த செய்தி

டிரெண்டிங்