ஆப்நகரம்

Mariyappan Brother: ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி கைது

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 22 Nov 2018, 6:58 pm
ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி மாணவிகளை கிண்டல் செய்த வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil arrest


2016ல் நடந்த ரியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மாரியப்பன். இவர் சேலம், ஓமலூர் அருகே உள்ள பெரிய வடம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில் மாரியப்பனின் தம்பியும், அவரது நண்பர்களும் சேர்ந்து அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவிகளை அடிக்கடி கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் தட்டி கேட்டதற்கு அவரையும் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரிக்க சென்ற போதும் கூட தான் மாரியப்பனின் தம்பி என மிரட்டியதாக தெரிகிறது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் உயர் அதிகாரிகள் மாரியப்பனின் தம்பி கோபி மற்றும் அவரது நண்பர்கள் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்