ஆப்நகரம்

அர்ஜுனா விருது கொடுக்காதது அவமதிப்பு: கடுப்பில் போபண்ணா!

முன்னணி இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவின் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்படாததற்காக அவர் இந்திய டென்னிஸ் சங்கத்தை கடித்து கொண்டிருக்கிறார்.

TNN 5 Aug 2017, 9:14 pm
முன்னணி இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவின் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்படாததற்காக அவர் இந்திய டென்னிஸ் சங்கத்தை கடித்து கொண்டிருக்கிறார்.
Samayam Tamil rohan bopanna is furious slams tennis association for denying him arjuna award
அர்ஜுனா விருது கொடுக்காதது அவமதிப்பு: கடுப்பில் போபண்ணா!


விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் இந்தியர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஆகியவற்றை மத்திய அரசு வழங்குகிறது.

இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருது டென்னிஸ் வீரர் சாகேத் மைனேனிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மூத்த வீரர் ரோகன் போபண்ணாவின் பெயர் பரிந்துரைக்கப்படவே இல்லை.

இதற்காக அதிருப்தி தெரிவித்துள்ள போபண்ணா இந்திய டென்னிஸ் சங்கத்தைக் கடிந்துகொண்டிருக்கிறார். "அர்ஜுனா விருது, நம் நாட்டில் ஒரு விளையாட்டு வீரர் பெறும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும். அது பெருமிதம் அளிக்கும் விருது மட்டும் அல்ல. ஓர் அங்கீகாரம் ஆகும்." என்று போபண்ணா கூறியுள்ளார்.

இது அவமதிப்பு மட்டுமல்ல, நம்பிக்கையை சீரழிப்பதாகவும் இருக்கிறது. இதுபோன்ற புறக்கணிப்பை கடந்த 10 ஆண்டுகளாக நான் பார்த்துக்கொண்டே வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்