ஆப்நகரம்

கரடியை வைத்து கால்பந்தாட்டத்தை நடத்திய ரஷ்ய அணி!!

ரஷ்யாவில் உள்ள கால்பந்து அணி ஒன்று, பயங்கர கரடியை வைத்து கால்பந்தாட்டத்தை தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Apr 2018, 4:26 pm
ரஷ்யாவில் உள்ள கால்பந்து அணி ஒன்று, பயங்கர கரடியை வைத்து கால்பந்தாட்டத்தை தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கரடியை வைத்து கால்பந்தாட்டத்தை நடத்திய ரஷ்ய அணி!!
கரடியை வைத்து கால்பந்தாட்டத்தை நடத்திய ரஷ்ய அணி!!


ரஷ்யாவில் உள்ள யாதிகோர்ஸ்க் நகரில் மாசூக் கே.எம்.வி மற்றும் அன்குஸ்ட் என்ற இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டிமா என்ற சர்க்கஸ் கரடியை அழைத்து வந்து, அந்தக் கரடியின் மூலம் கால்பந்தை நடுவரிடம் வழங்கி போட்டியைத் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அன்குஸ்ட் அணியினர், இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டியையும் கரடியை வைத்தே தொடங்குவோம் எனக் கூறியதற்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஒப்புதல் மறுத்துள்ளது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்